ரொம்ப அசிங்கமா போச்சு குமாரு: காங்., தலைவரை பங்கம் செய்த தொண்டர்கள்!

ரொம்ப அசிங்கமா போச்சு குமாரு: காங்., தலைவரை பங்கம் செய்த தொண்டர்கள்!

Share it if you like it

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தொண்டர்கள் மோடிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய காணொளி வைரலாகி வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் அக்கட்சியின் தலைவராக இருப்பவர் மல்லிகார்ஜுன கார்கே. இவர், தாம் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் இவ்வாறு பேசினார் ;

2 கோடி வேலைவாய்ப்பை இளைஞர்களுக்கு தருவதாக பா.ஜ.க. தலைவர்கள் கூறினார்கள். அதனை செய்தார்களா? இவர்கள் பொய்களின் தலைவர்கள். இது உண்மையா? பொய்யா? அவர் கூறினார், ‘என்னை தேர்ந்தெடுங்கள் நான் ஒரு ஏழை’ என்று. நாட்டை கட்டமைப்பேன் என்றார். நாட்டில் உள்ளவர்களுக்கு ஆண்டுதோறும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றார். வேலை கொடுத்தாரா? மக்கள்; ஆம். கிடைத்தது. நீங்கள் கடின உழைப்பாளிகள் எனவே, உங்களுக்கு வேலை கிடைத்திருக்கும் என கூறியிருக்கிறார்.

கடினமாக முயற்சி செய்பவர்களுக்கு மட்டுமே வேலை கிடைக்கும். வீட்டில் அமர்ந்து கொண்டு பொழுது போக்குபவர்களுக்கு எப்படி? வேலை கிடைக்கும் என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது. இது, கூட தெரியாமல் இவர் எப்படி? காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் முடியும். இதனை, அரசியல் ஞானி ராகுல் காந்தி உடனடியாக கண்டிக்க வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it