வந்தே பாரத் ரயிலில் எம்.பி.யின் புகைப்படத்தை ஒட்டி காங்கிரஸார் அட்டூழியம்!

வந்தே பாரத் ரயிலில் எம்.பி.யின் புகைப்படத்தை ஒட்டி காங்கிரஸார் அட்டூழியம்!

Share it if you like it

வந்தே பாரத் ரயிலில் எம்.பி.யின் புகைப்படத்தை ஒட்டி காங்கிரஸ் தொண்டர்கள் அராஜகம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக அண்மையில் கேரளாவிற்கு சென்று இருந்தார். அந்த வகையில், நேற்றைய தினம் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் பாலக்காடு எம்.பி.யுமாக இருப்பவர் வி.கே. ஸ்ரீகண்டன். இவரது, ஆதரவாளர்கள் வந்தே பாரத் ரயிலில் அவரது புகைப்படத்தை ஒட்டி அட்டூழியம் செய்து உள்ளனர். இதற்கு, பொதுமக்கள் உட்பட சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Image

Share it if you like it