பா.ஜ.க.வில் ராஜாஜி பேரன்… எப்போ வருவார் நேரு பேரன்..?

பா.ஜ.க.வில் ராஜாஜி பேரன்… எப்போ வருவார் நேரு பேரன்..?

Share it if you like it

முதுபெரும் காங்கிரஸ் தலைவரும், மறைந்த முன்னாள் முதல்வருமான ராஜாஜியின் கொள்ளுப்பேரன் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்திருக்கும் நிலையில், நேரு பேரன் எப்போது வருவார் பலரும் கிண்டலாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கழுதை தேய்ந்து கட்டெரும்பான கதையாக, நமது பாரதத்தில் காங்கிரஸ் கட்சி தேய்ந்து வருகிறது. அக்கட்சியில் இருந்த முக்கியத் தலைவர்களின் பேரன்கள் பலரும் பா.ஜ.க.வில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ராணுவ அமைச்சருமான கேரளாவைச் சேர்ந்த ஏ.கே.ஆண்டனியின் மகன் அனில் ஆண்டனி, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார்.

இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான மறைந்த ராஜாஜியின் கொள்ளுப்பேரன் சி.ஆர்.கேசவன் இன்று பா.ஜ.க.வில் இணைந்திருக்கிறார். இதை பா.ஜ.க. தலைவர்கள் பலரும் வரவேற்றிருக்கிறார்கள். அதேசமயம், நெட்டிசன்கள் உள்ளிட்ட பலரும் காங்கிரஸ் கட்சியில் இருந்த பெரும்பாலான தலைவர்களின் வாரிசுகள் பா.ஜ.க.வில் இணைந்து விட்டார்கள். குறிப்பாக, ராஜாஜியின் பேரனே வந்து விட்டார். நேருவின் பேரனான ராகுல் காந்தி எப்போது பா.ஜ.க.வில் இணையப் போகிறார் என்று நக்கலாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it