கர்த்தர் கிருபை இருப்பதால் கொரோனா கிருமி நம்மை ஒன்றும் செய்ய முடியவில்லை கிறிஸ்தவ மதபோதகர்..!

கர்த்தர் கிருபை இருப்பதால் கொரோனா கிருமி நம்மை ஒன்றும் செய்ய முடியவில்லை கிறிஸ்தவ மதபோதகர்..!

Share it if you like it

மக்களுக்கு உதவிகள், செய்வதாக கூறிக்கொண்டு, அந்நிய நாடுகளில் இருந்து வரும் சில்லறைகளுக்கு ஆசைபட்டு. அப்பாவி மக்களை இன்று வரை கிறிஸ்தவ மிஷனரிகள் ஏமாற்றி வரும் கூத்து உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வது அனைவரும் அறிந்ததே.

ஜாதி, மதம், மொழி, இனம், ஏழை, பணக்காரன், என்று உலகையே ரத்த கண்ணீர் வடிக்க வைத்து வரும். கொரோனாவை கட்டுப்படுத்த, வல்லரசு நாடுகள் முதல் சிறிய நாடுகள் வரை மிக கடுமையாக போராடி வருகிறது.

இந்நிலையில் சென்னையை சேர்ந்த கிறிஸ்தவ மதபோதகர் எம்.டி.ஜெகன் கூறியதாவது.

அமெரிக்காவையே துண்டிக்கப்பட்ட, நகரமாக மாற்றிவிட்டார்கள். யாரும்  அமெரிக்கா போகவும் கூடாது. அங்கிருந்து வரவும் கூடாது. அனைவரையும் அடித்து நொறுக்கும் கொரோனா கிருமி உங்களையும், என்னையும் ஒன்றும் செய்ய முடியவில்லை. கர்த்தர் கிருபை சந்தோஷமாக நம்மை வைத்து இருக்கிறது. நீங்கள் நானும் ஜீவனோடு இருக்கிறோம்.

உங்களைப் பார்க்கும் பொழுது எல்லாம். எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடைய பர்சனல் டாக்டர் அவுட். ஸ்பெயின் இளவரசி காலி, இங்கிலாந்து பிரதமர் கொரோனாவில் இருந்து தப்பி வந்துவிட்டார். பெரிய, பெரிய ஆட்கள் எல்லாம் அட்மிட்  ரிட்டன், அட்மிட்  ரிட்டன், என்று சபை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முன்பு பேசியுள்ளார்.

  • அமெரிக்கா கிறிஸ்தவ நாடு இல்லையா?
  • ஸ்பெயின் இளவரசி கிறிஸ்தவர் இல்லையா?
  • இங்கிலாந்து பிரதமர் கிறிஸ்தவர் இல்லையா?
  • கிறிஸ்தவர்கள் யாரும் கொரோனாவில் இறக்கவில்லையா?
  • அக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருவரும் ஏன்? மேற்கூறிய வகையில் கேள்வி எழுப்பவில்லை என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வெகு விரைவில் கொரோனாவை மதம் மாற்றம் செய்து விடுவார்கள் கிறிஸ்தவ மிஷநரிகள் நெட்டிசன்கள் கருத்து.


Share it if you like it