கொரோனா வைரஸை பரவ விட்டது எங்கள் நாடு தான் சீன நாட்டு வைராலஜிஸ்ட் பரபரப்பு பேட்டி..!

கொரோனா வைரஸை பரவ விட்டது எங்கள் நாடு தான் சீன நாட்டு வைராலஜிஸ்ட் பரபரப்பு பேட்டி..!

Share it if you like it

சீனாவின் முன்னாள் கால் பந்து வீரரும், சீன மக்களால் பெரிதும் நேசிக்கப்படுபவருமான ’ஹாவ் ஹைடோங்’ அண்மையில் காணொலி ஒன்றினை வெளியிட்டு ஜி ஜின் பிங் அரசாங்கத்தையும், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியையும் மனித குலத்திலிருந்தே வெளியேற்ற வேண்டும் என்று தனது கடும் எதிர்ப்பினை தெரிவித்து இருந்தார்.

அந்நாட்களில் அவர் வெளியிட்டு இருந்த காணொலியில் இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த கம்யூனிஸ்ட் கட்சி சீன மக்களை காலில் போட்டு மிதித்து விடக்கூடாது என்பது எனது எண்ணம். கம்யூனிஸ்ட் கட்சியை குலத்திலிருந்தே வெளியேற்ற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். என் 50 வருட வாழ்க்கைக்குப் பிறகு நான் தெரிந்து கொண்ட முடிவு இது தான் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

உலகம் முழுவதும் கதறல், அழுகை, மரண ஓலம், இதற்கு காரணம் சீனா மற்றும் உலக சுகாதார அமைப்பு செய்த தவறு என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. வல்லரசு நாடுகள் முதல் சிறிய நாடுகள் வரை சீனாவின் மீது கடும் கோபத்தில் உள்ள நிலையில்

கொரோனா வைரஸை ஆயுதமாக, பயன்படுத்துவது. பற்றி 2015-ஆம் ஆண்டே சீன விஞ்ஞானிகள் மற்றும் அந்நாட்டு சுகாதாரத்துறையினர் ரகசிய ஆலோசனை நடத்தியதாகவும் அதற்குரிய ஆவணம் தங்களுக்கு கிடைத்திருப்பதாக THE AUSTRALIAN என்ற பத்திரிகை அண்மையில் செய்தி வெளியிட்டு இருந்தது.

இந்நிலையில் சீன ராணுவ ஆய்வகத்தில் இருந்து வெளியானது தான் கொரோனா. வேண்டுமென்றே வைரஸை பரவ விட்டது எங்கள் நாட்டு அரசு தான் என்று பிரபல சீன நாட்டு வைராலஜிஸ்ட் லீ மெங் யான் பரபரப்பு பேட்டியினை இந்தியா டுடேவிற்கு அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Image


Share it if you like it