ஆண்டவர் ஆசீர்வாதம் வேண்டுமா?: பொன், வைரம், தங்கம், கொடு… பலே பாதிரியாரின் நூதன உருட்டு!

ஆண்டவர் ஆசீர்வாதம் வேண்டுமா?: பொன், வைரம், தங்கம், கொடு… பலே பாதிரியாரின் நூதன உருட்டு!

Share it if you like it

ஆண்டவர் ஆசீர்வாதம் வேண்டும் என்றால் பொன், வைரம், தங்கத்தை நீ எனக்கு கொடுக்க வேண்டும் என பாதிரியார் பேசிய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

அக்காணொளியில் அவர் பேசியதாவது ;

நீங்கள் காணிக்கையாய்ச் செலுத்தும் எவ்விதமான பொருள்களும் பாஸ்டர்களுக்குறியது. முதல் பலன் பாஸ்டர்களுக்கு மட்டுமே சேரும். தங்கம், வெள்ளி மற்றும் ( வைரம், வைடூரியம் ) உயர் ரக கற்கள் எல்லாவற்றையும் பாஸ்டர்களுக்கு கொடுக்க வேண்டும். இதற்கான, ஆதாரம் பழைய ஏற்பாட்டில் உள்ளது. இதனை, எப்படி கொடுக்க வேண்டும் என்றால் மனப்பூர்வமாக கொடுக்க வேண்டும். பழைய ஏற்பாட்டில் கொடுத்ததை காட்டிலும், நீ அதிகமாக கொடுக்கவில்லை என்றால் நீ சொர்க்கத்திற்கு போக மாட்டாய். ஒரு குடும்பம் என்னிடம் ஜபம் செய்வதற்கு வந்தது. நான், அவர்களுக்காக ஜெபித்தேன். அதன் பிறகு, அந்த குடும்பம் என்னிடம் ஒரு டிபன் பாக்ஸ் கொடுத்தார்கள். அதில், சப்பாத்தியும், கோழி கறியும் இருக்கும் என நான் நினைத்தேன். அவர்கள் சென்ற பிறகு திறந்து பார்த்தால் உள்ளே தங்கம் இருந்தது. என கூறியுள்ளார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it