விமான பணிப்பெண் பலாத்காரம்: காங்கிரஸ் பிரமுகர் கைது!

விமான பணிப்பெண் பலாத்காரம்: காங்கிரஸ் பிரமுகர் கைது!

Share it if you like it

டெல்லியில் விமான பணிப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த காங்கிரஸ் பிரமுகர் போலீஸாரால் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

டெல்லி மஹ்ரவுலி பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர், விமான பணிப் பெண்ணாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு டெல்லி கான்பூர் பகுதியில் வசிக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிளாக் தலைவர் ஹர்ஜீத் யாதவ் என்பவர், கடந்த இரு மாதங்களுக்கு முன்பு அறிமுகமாகி இருக்கிறார். இவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக பழகி வந்திருக்கின்றனர். இந்த நிலையில், ஹர்ஜீத் யாதவ் நேற்று குடிபோதையில் அப்பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்திருக்கிறார். பின்னர், திடீரென கதவை தாழிட்ட ஹர்ஜீத் யாதவ், அப்பெண்ணை தோழி என்றும் பாராமல் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். அவரிடமிருந்து தப்பிக்க அப்பெண் போராடியும் முடியவில்லை. ஆகவே, ஹர்ஜீத் யாதவிடம் தனது கற்பை இழந்த அப்பெண், அவரை பழிவாங்க முடிவு செய்தார். அதன்படி, அவரிடம் நைசாகப் பேசி ஒரு அறைக்குள் வரவழைத்து உள்ளே தள்ளி தாழிட்டார். பிறகு, வெளியே சென்று அவசர போலீஸ் எண்ணான 112-க்கு போன் செய்திருக்கிறார். உடனே, சம்பவ இடத்துக்கு  விரைந்து சென்ற போலீஸார், ஹர்ஜீத்தை கைது செய்தனர்.


Share it if you like it