ஹனுமன் ஜெயந்தி விழாவில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் வன்முறை வெறியாட்டம்!

ஹனுமன் ஜெயந்தி விழாவில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் வன்முறை வெறியாட்டம்!

Share it if you like it

டெல்லியில் நடந்த ஹனுமன் ஜெயந்தி விழாவில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்ட வன்முறையை அரங்கேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

பாரதம் முழுவதும் நேற்று ஹனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. அந்த வகையில், டெல்லியிலும் கொண்டாடப்பட்டது. டெல்லி ஜஹான்கிர்புரியில் ஹனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது, திடீரென அப்பகுதியில் திரண்ட இஸ்லாமிய அடிப்படைவாதிகள், ஹனுமன் ஜெயந்தி விழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்த ஹிந்துக்கள் மீது சரமாரியாக கற்கலை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும், கையில் கத்தி போன்ற ஆயுதங்களை வைத்துக் கொண்டு வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதில், 20-க்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் உட்பட போலீஸார் பலரும் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் டெல்லி பாபு ஜகஜீவன் ராம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு மேலும் வன்முறை நடக்காத வண்ணம் தடுக்கப்பட்டது. கல்வீச்சு, வன்முறை சம்பவத்துக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

ஏற்கெனவே, ராஜ,ஸ்தான் மாநிலத்தில் ஏப்ரல் 2-ம் புத்தாண்டு கொண்டாடிய ஹிந்துக்கள் மீது கரௌளி என்கிற பகுதியில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டதோடு, வீடுகளுக்கும் தீவைத்து வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் அரங்கேறியது. இதைத் தொடர்ந்து, கடந்தவாரம் நடந்த ராமநவமி ஊர்வலத்தின்போது, கோவா, குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் ஹிந்துக்கள் மீது இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தாக்குதல் நடத்தி வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது, ஹனுமன் ஜெயந்தி விழாவிலும் வன்முறையை அரங்கேற்றி இருக்கிறார்கள்.

இப்படி ஹிந்துக்கள் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகையின்போதும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டு வருவது ஹிந்துக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எங்கே காஷ்மீரில் ஹிந்து பண்டிட்களை அடித்து விரட்டியது போல நம்மையும் இந்த நாட்டை விட்டே அடித்து விரட்டி விடுவார்களோ என்கிற பயம் எழுந்திருக்கிறது. ஹிந்துக்கள் மெஜாரிட்டியாக இருக்கும் இந்நாட்டில் ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று நினைக்கும் போது வேதனையாக இருப்பதாக ஹிந்து அமைப்புகள் வருத்தம் தெரிவிக்கின்றன. ஆகவே, வன்முறையில் ஈடுபடும் அடிப்படைவாதிகளை அடக்கி ஒடுக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது என்கிறார்கள் ஹிந்து அமைப்பினர்.


Share it if you like it