மோடி, அமித்ஷாவுக்கு சாபம் விடும் ரோஹிங்கியா முஸ்லீம்கள்!

மோடி, அமித்ஷாவுக்கு சாபம் விடும் ரோஹிங்கியா முஸ்லீம்கள்!

Share it if you like it

டெல்லியில் வன்முறையில் ஈடுபட்ட இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் ஆக்கிரமிப்பு வீடு, கடைகளை இடித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் சாபம் விட்டு தூவா செய்திருக்கிறார்கள் ரோஹிங்கியா முஸ்லீம்கள்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய அண்டை நாடுகளில் முஸ்லீம்களுக்குள் மோதல் நடந்து வருவதால், அங்கிருந்து வெளியேறும் முஸ்லீம்கள் இந்தியாவில் அத்துமீறி ஊடுருவி வருகின்றனர். இவர்கள், டெல்லி, ஹரியானா, மேற்குவங்கம், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு அப்பகுதிகளில் வசிக்கும் இஸ்லாமியர்கள் அடைக்கலம் கொடுத்து வைத்திருக்கிறார்கள். அதேசமயம், இவ்வாறு ஊடுருவியர்களில் ஏராளமானோர் மத்திய அரசால் அடையாளம் காணப்பட்டு, அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு வீடு, உணவு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை மத்திய அரசு செய்து வருகிறது.

இந்த நிலையில், டெல்லி ஜஹாங்கிர்புரியில் ஏப்ரல் 16-ம் தேதி நடந்த ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தை சீர்குலைக்கும் விதமான வன்முறையை கட்டவிழ்த்து விட்டார்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகள். இவர்களில் பெரும்பாலானோர் ரோஹிங்கியா முஸ்லீம்கள். இவர்கள் டெல்லியின் பல்வேறு பகுதிகளை ஆக்கிரமித்து வீடுகளை கட்டியிருப்பதோடு, சாலைகளை ஆக்கிரமித்து கடைகளையும் நடத்தி வருகின்றனர். ஹனுமன் ஜெயந்தி அன்று ஹிந்துக்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியவர்கள், ஒரு கட்டத்தில் கத்தி போன்ற கூரிய ஆயுதங்களாலும் தாக்கினார்கள். மேலும், ஒரு மர்ம நபர் துப்பாக்கிச் சூடும் நடத்தினார். இதில், போலீஸ்காரர்கள் உட்பட ஹிந்துக்கள் பலரும் காயமடைந்தனர்.

இதையடுத்து, ஜஹாங்கிர்புரியை ஆக்கிரமித்து ரோஹிங்கியா முஸ்லீம்கள் கட்டியிருக்கும் வீடு, கடைகளை இடிக்க முடிவு செய்தது டெல்லி முனிசபல் கார்ப்பரேஷன். இதற்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பாணியைக் கடைப்பிடித்த அதிகாரிகள், புல்டோசர்கள் மூலம் வீடு, கடைகளை இடித்து தரைமட்டமாக்கினார்கள். இதனால், ஆத்திரமடைந்த அகதிகள் முகாமில் வசிக்கும் ரோஹிங்கியா முஸ்லீம்கள், பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் சாபம் விட்டு துவா செய்திருக்கிறார்கள்.

அதாவது, முஸ்லீம்களின் வீடுகளை இடித்த மோடி, அமித்ஷா ஆகியோருக்கு பக்கவாதம் வரவேண்டும். அதோடு, உலகிலுள்ள அத்தனை வியாதிகளும் வரவேண்டும். தவிர, அவர்களது பரம்பரையே நாசமாகப் போகவேண்டும். மேலும், ஹிந்துக்கள் படாத துன்பமெல்லாம் பட்டு, இஸ்லாம் மதத்தை தழுவ வேண்டும் என்று பிரார்த்தனை செய்திருக்கிறார்கள். இக்காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்து விட்டு பலரும், அகதிகள் முகாமில் இருந்துகொண்டு ஹிந்துக்களின் வரிப்பணத்தில் சாப்பிட்டுக் கொண்டு ஹிந்துக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்களே என்று வேதனை தெரிவிக்கிறார்கள்.

பொதுவாக, இஸ்லாமியர்களை பொறுத்தவரை ரோஹிங்கியா முஸ்லீம்கள் மிகவும் ஆபத்தானவர்கள் என்று கூறப்படுகிறது. வெடிகுண்டு தயாரிப்பதில் தொடங்கி கூரிய ஆயுதங்கள் தயாரிப்பதுவரை அனைத்து வித்தைகளையும் கற்றுவைத்திருப்பார்களாம். ஒரே இடத்தில் கூட்டாக வசிக்கும் இவர்கள், இஸ்லாமியர்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால், அப்பகுதியையே சூறையாடி விடுவார்களாம். மேலும், ஹிந்துக்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடுவதில் வல்லவர்களாம். இந்தியாவில் நடக்கும் பல்வேறு வன்முறை மற்றும் பயங்கரவாதங்களுக்கு காரணமே இவர்கள்தான் என்று கூறப்படுகிறது. ஆகவே, மத்திய அரசு மிகவும் டேஞ்சரான இந்த ரோஹிங்கியா முஸ்லீம்களை அடையாளம் கண்டு மீண்டும் பங்களாதேஷுக்கு நாடு கடத்த வேண்டும் என்பதுதான் அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

கடந்த 3 ஆண்டுகளாக பல மறைக்கப்பட்ட வரலாறுகள், சொல்லப்படாத உண்மை செய்திகள் உங்களிடம் கொண்டு வந்து சேர்த்ததில் மீடியான் பெருமை கொள்கிறது. இப்பணி சிறப்பாக, தரமாக தொடர உங்கள் ஆதரவு அவசியம். மீடியான் குடும்பத்தின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு கரம் சேர்ப்போம்.


Share it if you like it