தேவாரம் பாடினால் பரிசு என ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் அறிவித்து இருப்பதற்கு பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
ஈஷா யோகா மையத்தின் நிறுவனராக இருப்பவர் ஜக்கி வாசுதேவ். இவர், தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார். அவரின், பதிவு இதோ ; தேவாரம் ஆழமான பக்தி மற்றும் உயிரோட்டத்தை வளர்த்து, இந்த தன்மைகளை ஒருவரது வாழ்வின் அடித்தளமாக்குகிறது. ஆதியோகி முன் தேவாரம் பாடும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தினமும் சிறப்புப் பரிசுகளை வழங்க உள்ளோம்! தமிழ்நாட்டுக் குழந்தைகள் தங்கள் ஆழமான கலாச்சாரத்தை அறியவேண்டும். -Sg என குறிப்பிட்டுள்ளார்.