திண்டுக்கல்: தி.மு.க. நிர்வாகி வெட்டிக்கொலை!

திண்டுக்கல்: தி.மு.க. நிர்வாகி வெட்டிக்கொலை!

Share it if you like it

திண்டுக்கல்லில் தி.மு.க. மாணவரணி நிர்வாகி பட்டறை சரவணன், அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

திண்டுக்கல் குமரன் திருநகரைச் சேர்ந்தவர் சரவணன். இவரது தந்தை இரும்பு பட்டறை வைத்திருக்கிறார். சரவணன் பட்டறையில் இருப்பதால், பட்டறை சரவணன் என்று நண்பர்களால் அழைக்கப்பட்டு வந்தார். மேலும், திண்டுக்கல் மாநகர தி.மு.க.வின் கிழக்கு பகுதி மாணவரணி துணை அமைப்பாளராகவும் சரவணன் இருந்து வந்தார். இவர் மீது கொலை, ஆள் கடத்தல், அடிதடி என 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில், சரவணன் நேற்று இரவு திண்டுக்கல் அண்ணாநகர் தைலத்தோப்பு பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்தார். அப்போது, காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் பட்டறை சரவணனின் கழுத்து, தலை, மற்றும் உடம்பு உட்பட பல இடங்களில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதில் சம்பவ இடத்திலேயே சரவணன் உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீஸார் சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் தி.மு.க. ஆளும்கட்சியாக இருந்து வரும் நிலையில், அக்கட்சியினருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுகிறது.


Share it if you like it