மோடியை ’ஹீரோ’ என்று தனது படத்தில் வசனம் வைத்த  இயக்குனருக்கு தொடரும் மிரட்டல்..!

மோடியை ’ஹீரோ’ என்று தனது படத்தில் வசனம் வைத்த  இயக்குனருக்கு தொடரும் மிரட்டல்..!

Share it if you like it

சீனாவின் தொடர் அடாவடி தனத்தை கண்டித்து., திரெளபதி படத்தின் இயக்குனர் ஜீ.மோகன் அண்மையில் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கருத்து தெரிவித்து இருந்தார்.

இந்தியா, சீனாவை விட பலம் குறைந்த நாடு என பலர் பதிவிடுவதை பார்க்க முடியுது.. உங்களுக்கு பிரதமர் மேல கடுப்பு அதான் இந்தியாவை குறை சொல்ற. இறக்குமதியை தடை செய்தால் சீனா பொருளாதாரமே ஆட்டம் ஆடிடும்.. அவன் மூடிட்டு தான் இருப்பான். நீங்களும் அப்படியே இருங்க.. இராணுவம் பார்த்துக்கும்..

பாரதப் பிரதமர் மோடி அரசின் துணிச்சலை வெகுவாக பாராட்டி இருந்தார் இயக்குனர் மோகன். இதற்கு வழக்கம் போல கிறிஸ்தவ மிஷநரி, இஸ்லாமிய அடிப்படைவாதிகள், கம்யூனிஸ்ட்கள், சில்லறை போராளிகள், தங்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தனர் என்பதை யாரும் மறந்திருக்க முடியாது.

ப. ஜெயக்குமார் தயாரித்து இயக்கியுள்ள படம்,’ வா பகண்டையா’ சமீபத்தில் வெளியான டீசரில், பிரதமர் மோடியை ஹீரோ என்று புகழும் வசனமும், பகுத்தறிவு பேசி பைத்தியமாக போறீங்க என்பது போன்ற விமர்சனங்களும் இத்திரைப்படத்தில் இடம் பெற்று உள்ளது.

இதனை பொறுத்து கொள்ள முடியாத சில்லறை போராளிகள் ’வா பகண்டையா’ இயக்குனருக்கும் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

Image

 


Share it if you like it