உலகபுகழ் பெற்ற திருவண்ணாமலையார் கோவில் பிரசாதத்தில் அன்னை தெரசா படம் இடம் பெற்று இருக்கும் சம்பவம் ஹிந்துக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு மேத்யூ கார்மெண்ட்ஸ் எனும் நிறுவனம் விபூதி பிரசாத பாக்கெட்டை நன்கொடையாக வழங்கியுள்ளது. அதில், அந்நிறுவனத்தின் பெயர் இடம் பெற்றது மட்டுமில்லாமல் அன்னை தெரசாவின் படத்தையும் அச்சிட்டு வழங்கியுள்ளது. இதுதான், ஹிந்துக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து, யாரோ ஒரு பக்தர் இதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதுதான், தற்போது பேசுப்பொருளாக மாறியிருக்கிறது. தகவல் அறிந்த ஹிந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் கோவிலில் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.