தமிழகத்தை குடிகார மாநிலமாக மாற்றி வருகிறது திராவிட மாடல் அரசு: கம்யூ. ஆதரவாளர் ஆவேசம்!

தமிழகத்தை குடிகார மாநிலமாக மாற்றி வருகிறது திராவிட மாடல் அரசு: கம்யூ. ஆதரவாளர் ஆவேசம்!

Share it if you like it

தி.மு.க. அரசு ஒட்டுமொத்த தமிழகத்தையும் குடிகார மாநிலமாக மாற்றிக் கொண்டிருக்கிறது என்று மூத்த பத்திரிகையாளர் மணி ஆவேசமாகக் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக தனியார் யூடியூப் சேனலுக்கு மணி அளித்த பேட்டியில், “ஒட்டுமொத்த தமிழகத்தையும் குடிகார மாநிலமாக மாற்றிக் கொண்டிருக்கிறது தி.மு.க. அரசு. ஒருவர் குடிக்கா விட்டால் அவர் மீது வழக்குப் போடும் சூழல் வந்தாலும் வரலாம். அந்தளவுக்கு மோசமான அரசாங்கம் நடந்து கொண்டிருக்கிறது. இது மன்னிக்க முடியாத குற்றம். தமிழகத்தில் செல்வாக்கு மிக்க ஒருவர், விளையாட்டு மைதானத்தில் நிர்வாகப் பொறுப்பில் இருக்கிறார். இதன் காரணமாகவே, விளையாட்டு மைதானங்களில் மதுபான விற்பனை செய்யும் அறிவிப்பை தி.மு.க. அரசு வெளியிட்டது” என்று ஆவேசமாகக் கூறியிருக்கிறார்.

தி.மு.க. அரசு பற்றி மூத்த பத்திரிகையாளர் மணி இன்னும் என்னவெல்லாம் சொன்னார் என்பது பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யவும்…


Share it if you like it