காவல்துறை அதிகாரியை மிரட்டும் வகையில் பேசிய தி.மு.க வேட்பாளர்..!

காவல்துறை அதிகாரியை மிரட்டும் வகையில் பேசிய தி.மு.க வேட்பாளர்..!

Share it if you like it

இன்னும் 5 மாதம் தான் இருக்கு., ஸ்பெஷல் டிஜிபி ’ராஜேஷ் தாஸ்’ எங்களுக்கு பெயர் எல்லாம் ஞாபகம் இருக்கு. நாங்க பார்க்காத காவல்துறையா என்று அண்மையில் நகைச்சுவை நடிகரும் தி.மு.க-வின் பிரபல ஆபாச பேச்சாளருமான உதயநிதி காவல்துறை உயர் அதிகாரிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதை யாரும் மறந்திருக்க முடியாது.

அதனை தொடர்ந்து சமீபத்தில்.,  தி.மு.க மூத்த தலைவர்களில் ஒருவரும். நாகர்கோவில் எம்.எல்.ஏ-வுமான சுரேஷ் ராஜன். தனது கடமையை செய்த காவல்துறை அதிகாரியின் தாயை மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில்.

தி.மு.க-வின் தொண்டாமுத்தூர் வேட்பாளர் கார்த்திகேய சேனாதிபதி. வேட்பு மனு தாக்கல் செய்ய செல்லும் பொழுது காவல்துறை அதிகாரியிடம் இவ்வாறு கூறியுள்ளார்.

வேலுமணி எல்லாம் ஒன்னும் செய்ய முடியாது. நாங்க இப்படி தான் பன்னுவோம். இன்னும் பாருங்க போக போக என்ன செய்கிறோம்.. ஆட்சி மாறும் காலம் மாறும் என்று காவல்துறை அதிகாரியை மிரட்டும் வகையில் பேசிய காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Image

 

 

 


Share it if you like it