மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறும் திமுக கவுன்சிலர்கள் !

மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறும் திமுக கவுன்சிலர்கள் !

Share it if you like it

வேலூர் மாவட்டத்தில் திமுக மேயர் சுஜாதா முன்னிலையில் மாமன்ற கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற திமுக கவுன்சிலர்கள் சிலர் சரமாரியாக குற்றசாட்டுகளை மேயரிடம் வைத்தனர். அதில் தங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மக்கள் குடிநீருடன் கழிவுநீரும் கலந்து வருவதாக கூறி அந்த தண்ணீரை பாட்டிலில் எடுத்து வந்து முறையிட்டனர். இதேபோல் காட்பாடியை சேர்ந்த புஷ்பலதா என்கிற கவுன்சிலர் தமது வார்டில் உள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்ய முடியவில்லை என்றும், மக்கள் கேட்கும் சரமாரி கேள்விகளுக்கு தன்னால் பதிலளிக்க முடியாததால் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் கூறினார். இதுதொடர்பாக அவர்கள் பேசிய வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

https://x.com/polimernews/status/1727589671146832035?s=20


Share it if you like it