தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்திய சிறந்த மாநிலங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்துவதில் சிறந்து விளங்கும் மாநிலங்களை ஆண்டுதோறும் மத்திய அரசு வரிசைப்படுத்தி வருகிறது. அந்தவகையில், 2022-ஆம் ஆண்டுக்கான மாநில தரவரிசை குறியீட்டை மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் அண்மையில் வெளியிட்டு இருந்தார். அதன்படி, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களின் வரிசையில், ஒடிசா முதலிடமும், உத்தர பிரதேசம் இரண்டாம் இடத்திலும், ஆந்திர பிரதேசம் மூன்றாம் இடத்திலும் உள்ளன. அந்தவகையில், தரவரிசை குறீயீட்டு பட்டியலில் தமிழகத்திற்கு ஒன்பதாவது இடம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
.