அந்த ரகசியத்தை சொல்லுங்க சார்: இப்ப நா வந்து என்ன சொல்றது உதயநிதி திருதிரு!

அந்த ரகசியத்தை சொல்லுங்க சார்: இப்ப நா வந்து என்ன சொல்றது உதயநிதி திருதிரு!

Share it if you like it

 

நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எனக்கு தெரியும் என்று சொன்னீங்களே எப்போ சார் ரத்து செய்வீங்க என்று இளம் பெண் ஒருவர் உதயநிதியிடம் கேட்க, அதற்கு அவர் திருதிருவென விழித்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பலத்த சிரிப்பலையை வரவழைத்து இருக்கிறது.

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். இவர், தி.மு.க. எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போது அக்கட்சியின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு இவ்வாறு பேசினார் ; நாங்கள், ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம். அந்த ரகசியம் எங்களுக்கு தெரியும். அந்த ரகசியத்தை இப்போ உங்களுக்கு நான் சொல்கிறேன். கொஞ்சமாவது, வெட்கம், மானம், சூடு, சொரணை இருக்க வேண்டும். மாணவர்களின் மீது உண்மையான அக்கறை வேண்டும் என அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மிக கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.

இதனிடையே, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து, சேப்பாக்க – திருவல்லிகேணி சட்டமன்ற உறுப்பினராக உதயநிதி இருந்து வருகிறார். இந்த ஆட்சி அமைந்து 16 மாதங்களை கடந்து விட்டது. எனினும், மக்கள் விரும்பும் அரசாக ஆட்சியை இந்த அரசு வழங்கவில்லை என்பதே நிதர்சனம்.

இப்படிப்பட்ட சூழலில், உதயநிதி ஸ்டாலினிடம் பிரபல இணையதள ஊடகமான விகடன் நேர்காணல் நடத்தி இருக்கிறது. அந்நிகழ்ச்சியில், கலந்து கொண்ட இளம் பெண் ஒருவர் நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எனக்கு தெரியும் என்று சொன்னீங்க அந்த ரகசியத்தை எங்களுக்கு சொல்ல முடியுமா? என்று கேட்டு இருக்கிறார். அதற்கு, உதயநிதி ஸ்டாலின் திருதிருவென விழித்த சம்பவம்தான் பொதுமக்கள் மத்தியில் பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

Image

Share it if you like it