உ.பி.யில் கிடைத்த வரவேற்பு… தமிழக மாணவர்கள் பெருமிதம்!

உ.பி.யில் கிடைத்த வரவேற்பு… தமிழக மாணவர்கள் பெருமிதம்!

Share it if you like it

காசி தமிழ் சங்கத்தில் தங்களுக்கு மிகப்பெரும் வரவேற்பு கிடைத்தாக தமிழக மாணவர்கள் பெருமிதத்துடன் கூறியிருக்கும் காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.

மத்திய அரசின் ஏற்பாட்டில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் தமிழறிஞர்கள் என சுமார் 2,500 பேர் பங்கேற்று உள்ளனர் என்று சொல்லப்படுகிறது.

காசி தமிழ் சங்கமம், குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் இவ்வாறு கூறியிருந்தார் ;

“காசிக்கும், தமிழகத்துக்கும் இடையே உள்ள பன்னெடுங்கால தொடர்புகளை நினைத்து போற்றும் வகையில், காசி தமிழ் சங்கமம் திருவிழா நடைபெற இருக்கிறது. இத்திருவிழாவில், தமிழ் மொழியின் மாண்புகளை, பாரம்பரிய பெருமைகளை, கலாசார அருமைகளை விளக்கும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகள் நவம்பர் 16 முதல் டிசம்பர் 16-ம் தேதி வரை நடைபெறுகிறது. வாரணாசியில் அமைந்துள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில், மகாகவி சுப்பிரமணிய பாரதிக்கு ஓர் இருக்கை அமைக்கப்பட்டிருக்கிறது. பாரதியாரின் உணர்வுப்பூர்வமான வரிகளுக்கு உயிரூட்டும் வகையில், இந்த இனிமையான நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

இந்நிகழ்ச்சிக்கு, தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் இருந்து தமிழ்மொழியின் பாரம்பரிய கலை, இலக்கியம், ஆன்மிகம், கல்வி போன்ற 12 பல்வேறு துறைகளைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள் சுமார் 2,500 பேர் காசிக்கு ரயில் மூலம் சிறப்பு விருந்தினராக அழைத்துச் செல்லப்படுவார்கள். காசி தமிழ் சங்கமம், தமிழ்மொழி மற்றும் தமிழ் மக்களின் பெருமைகளை நாடறியச் செய்யும். இந்த நல்ல முயற்சியை தமிழக பா.ஜ.க. சார்பில் பாராட்டி வரவேற்கிறோம்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதனிடையே, காசி தமிழ் சங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தமிழகம் திரும்பி இருக்கும் மாணவர்கள் உத்தர பிரதேசத்தில் கிடைத்த மரியாதை குறித்தும், தங்களுக்கு கிடைத்த புதிய அனுபவங்கள் பற்றி மிக தெளிவாக கூறியிருக்கின்றனர். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

’ஹிந்தி படித்தால் பானி பூரி தான் விற்க முடியும் என்று தமிழக அமைச்சர்களில் தொடங்கி ’ஹிந்தி தெரியாது போடா என்று உதயநிதி ஸ்டாலின் வரை வட மாநிலத்தவர்கள் மீது தங்களது வன்மத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால், உ.பி. சென்ற தமிழக மாணவர்களுக்கு வட மாநிலத்தவர்கள் எந்த அளவிற்கு மரியாதையை கொடுத்து உள்ளனர் என்பதற்கு தமிழக மாணவர்களின் காணொளியே சிறந்த உதாரணம் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it