சங்கிங்க ரொம்ப இம்ச படுத்துறாங்க காப்பாத்துங்க… முதல்வரிடம் அலறிய தொண்டர்!

சங்கிங்க ரொம்ப இம்ச படுத்துறாங்க காப்பாத்துங்க… முதல்வரிடம் அலறிய தொண்டர்!

Share it if you like it

சங்கிங்க தொல்லை தாங்க முடியவில்லை என தி.மு.க. தொண்டர் ஒருவர் முதல்வரிடம் ஓலமிட்ட காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

மக்கள் நலன் சார்ந்த பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்கும் விதமாக தென்காசி மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்றுள்ளார். அந்தவகையில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸில் நேற்றிரவு இரவு 8.44-க்கு தென்காசிக்கு சென்றார். அவருடன், மனைவி துர்கா ஸ்டாலின், அமைச்சர் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, மற்றும் அரசு உயர் அதிகாரிகள் என பலர் பயணம் மேற்கொண்டனர்.

இதனிடையே, முதல்வர் ஸ்டாலினை வழியனுப்பி வைக்கும் விதமாக, ஏராளமான தி.மு.க. தொண்டர்கள் ரயில் நிலையத்தில் குழுமியிருந்தனர். இதையடுத்து, முதல்வருக்கு வாழ்க கோஷத்தை எழுப்பினர். அப்போது, கூட்டத்தில் இருந்த தொண்டர் ஒருவர், தலைவரே தமிழ்நாட்டில் சங்கிகள் தொல்லை தாங்க முடியவில்லை என்று தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். தனது கட்சி தொண்டருக்கு என்ன? ஆறுதல் கூறுவது என்று தெரியாமல் ஸ்டாலின் விழித்த காணொளி தற்போது வைரலாகி வருகிறது.


Share it if you like it