தி.மு.க. ’மாஜி’ எம்.எல்.ஏ.வை தேடும் நெட்டிசன்கள்!

தி.மு.க. ’மாஜி’ எம்.எல்.ஏ.வை தேடும் நெட்டிசன்கள்!

Share it if you like it

இன்பநிதி குறித்து பெருமையாக பேசிய தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி. ராஜனை நெட்டிசன்கள் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடலூர் கிழக்கு மாவட்டம், கடலூர் மாநகர தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழா நிறைவு பொதுக்கூட்டம், கடலூர் புதுப்பாளையம் கடை வீதியில் கடந்த ஆண்டு டிச.,17 – ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, மாநகர செயலாளர் கே.எஸ். ராஜா தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி. ராஜன், கட்சியின் மூத்த நிர்வாகிகள், கழக கண்மணிகள், தொண்டர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டர்.

இதையடுத்து, தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி. ராஜன் பேசும் போது, கருணாநிதிக்கு பிறகு, தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார். அவரது, மகன் உதயநிதி தற்போது அமைச்சராகி உள்ளார். விரைவில், அவர் துணை முதல்வராக பொறுப்பு ஏற்பார். இன்னும், எத்தனை ஆண்டு காலம் நான் உயிரோடு இருப்பேன் என்பது எனக்கு தெரியாது. எனக்கு, ஒரே ஆசை இன்பநிதி ஐயாவையும் தமிழக முதல்வராக நான் பார்த்து விட வேண்டும் என உருக்கமாக பேசியிருந்தார். அவரின், பேச்சு சமூகவலைத்தளங்களில் வைரலாகி பொதுமக்களிடையே பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், தமிழக முதல்வராக இன்பநிதி ஐயா வர வேண்டும் என பெருமையாக பேசிய முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி. ராஜன் எங்கே? பதுங்கி கொண்டு இருக்கிறார் என நெட்டிசன்கள் அவரை தேடி வருகின்றனர். இதற்கு, என்ன? காரணம் என்று தெரியவில்லை.


Share it if you like it