பட்டியல் சமூக மக்கள் பாதிக்கப்பட்டால்… தி.மு.க. வராது நான் தான் வருவேன் – திருமா சர்ச்சை பேச்சு!

பட்டியல் சமூக மக்கள் பாதிக்கப்பட்டால்… தி.மு.க. வராது நான் தான் வருவேன் – திருமா சர்ச்சை பேச்சு!

Share it if you like it

தி.மு.க., அ.தி.மு.க.வில் உள்ள பட்டியல் சமூக மக்கள் பாதிக்கப்பட்டால் அக்கட்சி சேர்ந்த தலைவர்கள் வர மாட்டார்கள் நான் தான் வருவேன் என வி.சி.க. தலைவர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவராக இருப்பவர் திருமாவளவன். இவரது, பேச்சு மற்றும் செயல்பாடுகள் சமீப காலமாக ஆளும் கட்சிக்கு எரிச்சலை ஏற்படுத்தும் வகையில் இருந்து வருகிறது. தி.மு.க. ஆட்சியில் பட்டியல் சமூக மக்கள் கடும் இன்னல்களையும், பெரும் நெருக்கடிகளையும் அனுபவித்து வருகின்றனர். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கழக கண்மணிகள் என பலர் பட்டியல் சமூக மக்களை படாதபாடு படுத்தி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் தான், வி.சி.க. தலைவர் திருமாவளன் இவ்வாறு பேசியிருக்கிறார் ; அ.தி.மு.க.வில் உள்ள பட்டியல் சமூகத்தை சேர்ந்த தலைவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு என்றால், எடப்பாடி பழனிசாமியோ, பன்னீர் செல்வமோ வரமாட்டார்கள்.

தி.மு.க.வில் உள்ள பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு என்றால் அக்கட்சியை சேர்ந்த தலைவர்கள் வரமாட்டார்கள். காங்கிரஸ், கம்யூனிஸ்ட், உள்ளிட்ட கட்சிகளில் இருக்கும் பட்டியல் சமூகத்தை சேர்ந்த தலைவர்களுக்கும் இது பொருந்தும். அவர்களுக்கு, ஏதேனும் ஒரு பாதிப்பு ஏற்பட்டால் நான் தான் வருவேன் என திருமாவளவன் ஆவேசமாக பேசியிருப்பது கூட்டணி கட்சி தலைவர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it