திராவிட மாடல் ரோடு…பாய் போல் சுருட்டி எடுத்த கிராம மக்கள்!

திராவிட மாடல் ரோடு…பாய் போல் சுருட்டி எடுத்த கிராம மக்கள்!

Share it if you like it

விடியல் அரசு அமைத்து கொடுத்த தார் சாலையை பாய் போல் சுருட்டி எடுத்த கிராம மக்கள். இக்காணொளி தற்போது வைரலாகி வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள உள்ளது வீடுர் அணை. இந்த அணையின் கரைப்பகுதியை பலத்த வேண்டி தமிழக அரசின் சார்பில் 43 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கடந்த 4 நான்கு நாட்களாக சாலை அமைக்கும் பணிகள் அங்கு வேகமாக நடைபெற்று வந்தன. வீடுர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகள் உள்ளன. இந்த நிலையில், அப்பகுதியை சேர்ந்த ஊர் மக்கள் சாலையை அமைக்கும் பணியை பார்வையிட்டுள்ளனர். அப்போது, தார் சாலை தரமற்ற முறையில் இருப்பதை கண்டு கிராம மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து, தார் சாலையை பாய் போல் சுருட்டி எடுத்துள்ளனர். மேலும், அதனை காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, சாலை அமைத்த அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் கிராம மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it