தி.மு.க.வின் கொத்தடிமை பத்திரிகையாளர்களை வெளுத்தெடுத்த – மணி!

தி.மு.க.வின் கொத்தடிமை பத்திரிகையாளர்களை வெளுத்தெடுத்த – மணி!

Share it if you like it

தி.மு.க.விற்கு ஆதரவாக செயல்படும் பத்திரிகையாளர்களை மணி வெளுத்து வாங்கியிருக்கும் காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

தமிழகத்தில், தி.மு.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் நடக்கும் அவலங்களை சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பு ஊடகங்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு உண்டு. எனினும், ஆளும் கட்சியின் ஆசி வேண்டும் என்பதால் பலர் கள்ள மெளனமாக இருந்து வருகின்றனர். இதனால், ஆளும் கட்சியை சேர்ந்த கழக கண்மணிகள் தொடர்ந்து பல்வேறு அட்டூழியங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில், தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவராக இருப்பவர் மணி. இவர், ’தி டிபேட்’ எனும் யூ டியூப் இணையதள ஊடகத்திற்கு பேட்டியளித்து இருக்கிறார். அப்போது, இந்த தி.மு.க. அரசு நாளுக்கு நாள் தனது செல்வாக்கினை தொடர்ந்து இழந்து வருகிறது. களத்தில் இறங்கி பாருங்க மக்களின் கோவம் என்னவென்பது தெரியும்.

அதைவிடுத்து, உங்களை போன்ற பத்திரிகையாளர்கள் தி.மு.க.விற்கு முட்டு கொடுத்து வருகின்றனர் என நெறியாளரிடம் மூத்த பத்திரிகையாளர் மணி ஆவேசமாக பேசியுள்ளார். இவரின், இந்த கருத்து சீப்பு செந்தில் உள்ளிட்டவர்களுக்கு சரியான பாடம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it