பட்டா நிலத்தில் கொட்டா: தி.மு.க நிர்வாகி கருணாநிதி அட்டூழியம்!

பட்டா நிலத்தில் கொட்டா: தி.மு.க நிர்வாகி கருணாநிதி அட்டூழியம்!

Share it if you like it

போலி பட்டா மூலம் பொதுமக்களின் நிலங்களை அபகரிக்க முயன்ற தி.மு.க நிர்வாகி.

திருவண்ணாமலை மாவட்டம் நம்மியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி. இவர், தி.மு.க ஒன்றிய துணை செயலாளராக இருந்து வருகிறார். இவர், வடபுழுதியூர் கிராமத்தை சேர்ந்த 30 பேரின் நிலங்களை போலி பட்டா மூலம் தனது பெயருக்கு மாற்றி மிகப் பெரிய மோசடியில் ஈடுபட்டு இருக்கிறார். அந்தவகையில், நிலங்களை பறிகொடுத்தவர்கள் திருவண்ணாமலையில் உள்ள தாலுக்கா அலுவலகதின் வாசலில் அமர்ந்து கொண்டு கோஷம் எழுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து, தி.மு.க நிர்வாகி மீது உடனே கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்டவர்கள் வாக்கு வாதம் செய்துள்ளனர். இதுகுறித்தான, செய்தியினை தினமலர் வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மக்களின் சொத்துக்களை அபேஸ் செய்த கருணாநிதி மீது முதல்வர் ஸ்டாலின் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it