சலூன் கடைக்கு மிரட்டல்… காவலர் நேவிஸ் பிரிட்டோ அட்டூழியம்!

சலூன் கடைக்கு மிரட்டல்… காவலர் நேவிஸ் பிரிட்டோ அட்டூழியம்!

Share it if you like it

தனது மகனுக்கு சரியாக முடி வெட்டவில்லை என காவலர் ஒருவர் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் திசையன்விளை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்ற கூடியவர் நேவிஸ் பிரிட்டோ. இவரது, மகன் சலூன் கடைக்கு சென்று முடி வெட்டிக்கொண்டு வீடு திரும்பியுள்ளான். இதனை, பார்த்த காவலர் முடி சரியாக வெட்டப்படவில்லை என்று தனது மகனை கண்டித்து இருக்கிறார். இதையடுத்து, தனது மகனை அழைத்து கொண்டு சலூன் கடைக்கு சென்று இருக்கிறார்.

இதில், கொடுமை என்னவென்றால் காவலர் வேறு ஒரு சலூன் கடைக்கு சென்று தகராறு செய்து இருக்கிறார். மேலும், கடைக்கு சீல் வைத்து விடுவேன் என சலூன் கடைகாரரை மிரட்டியுள்ளளார். இதையடுத்து, சலூன் கடையின் உரிமையாளர் கிருஷ்ணன் காவலர் நேவிஸ் மீது திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it