பத்திரிகையாளரிடம் வாக்குவாதம் செய்த அமைச்சர்!

பத்திரிகையாளரிடம் வாக்குவாதம் செய்த அமைச்சர்!

Share it if you like it

குமரி பத்திரிகையாளர்களிடம் ஹிந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கடும் வாக்குவாதம் செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் விடியல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் ஹிந்துக்களின் பண்டிகைகள், வழிபாட்டு முறைகள், பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன. அந்த வகையில், ஹிந்துக்களின் உணர்வுகள் தொடர்ந்து புண்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தான், கன்னியாகுமரியில் நடைபெற உள்ள ஹிந்து சமய மாநாட்டுக்கு தி.மு.க. அரசு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறது. இதனை, கண்டித்து ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அண்மையில் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இப்படிப்பட்ட சூழலில், ஹிந்து சமய மாநாடு குறித்து ஆலோசனை மேற்கொள்ளும் விதமாக அமைச்சர் சேகர் பாபு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்றதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில், பல்வேறு ஹிந்து அமைப்புகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டு இருக்கிறார். எனினும், விடியல் அரசின் பதில் தங்களுக்கு திருப்தியாக இல்லை என ஹிந்து அமைப்புகள் குற்றம் சாட்டியதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, ஹிந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பத்திரிகையாளர்களை சந்தித்து இருக்கிறார். அப்போது, அவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் முறையாக பதில் அளிக்காமல் அவர்களிடம் கடுமையாக நடந்து கொண்டுள்ளார். மேலும், என்னை தொந்தரவு செய்யாதீர்கள் என அவர்களிடம் வாக்குவாதம் செய்த சம்பவம்தான் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it