வட மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு அறிவே கிடையாது என தி.மு.க. மூத்த தலைவர் ஆர். எஸ். பாரதி பேசிய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
தி.மு.க. கூட்டணியில் உள்ள திருமாவளவன், வேல்முருகன் உள்ளிட்டவர்கள் வடமாநில தொழிலாளர்கள் குறித்து தொடர்ந்து அவதூறு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல, தி.மு.க.வின் மூத்த தலைவர்களும் தொடர்ந்து அவர்களுக்கு எதிராக தங்களது வன்மத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தான், தி.மு.க.வின் மூத்த தலைவர் ஆர்.எஸ். பாரதி பேசிய காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், அவர் பேசியதாவது ; இந்தியாவிலேயே தமிழகம் தலை சிறந்து விளங்க திராவிட இயக்கம் தான் காரணம். வடமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு அறிவு கிடையாது என அவர் கூறியுள்ளார்.