நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கல் செய்த போது முதல்வர் உட்பட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தூங்கி வழிந்த சம்பவம் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தில் விடியல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சி அமைந்து இரண்டு வருடங்களை பூர்த்தி செய்ய உள்ளது. இந்த நிலையில், தி.மு.க. அரசு தனது இரண்டாவது பட்ஜெட்டை சட்டசபையில் இன்று தாக்கல் செய்கிறது. அதன்படி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தி.மு.க. அரசு செய்த சாதனைகளை விளக்கமாக எடுத்துரைத்து வருகிறார். இந்த நிலையில் தான், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் தூங்கி வழிந்துள்ளனர். இதில், கொடுமை என்னவென்றால் முதல்வரும் தூங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.