கதை கேளு கதை கேளு… சீமான் உடும்பு கதைய கேளு..!

கதை கேளு கதை கேளு… சீமான் உடும்பு கதைய கேளு..!

Share it if you like it

கதை சொல்லுவதில் வல்லவரான சீமானின் லேட்டஸ்ட் கதை உடும்புக் கறி கதை… இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி கேலி, கிண்டலுக்கு உள்ளாகி இருக்கிறது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏராளமான கதைகளுக்கு சொந்தக்காரர். சிறு வயதில் குத்துச் சண்டை வீரர்களை தோற்கடித்தது, இந்தியாவிலேயே முதன் முதலில் ஏகே74 துப்பாக்கி சுட்டது, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் அமைக்கறி விருந்து பரிமாறியது என இவர் சொல்லாத கதைகளே இல்லை. சமீபத்தில் தனது வீட்டுக்கு வரும் காக்கா சோறு சாப்பிடாது, முட்டையும் மீனையும் அவித்து வைத்தால்தான் சாப்பிடும். மேலும், நெய்ச் சோறுதான் சாப்பிடும் என்று கூறியது வைரலானது.

இந்த நிலையில், புதிதாக உடுப்புக் கறி கதையை அவிழ்த்து விட்டிருக்கிறார் சீமான். அதாவது, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்களின் ஒருவரான பாலகுமாரன் வீட்டில் விருந்து வைத்ததாகவும், அவ்விருந்தில் தனக்கு மஞ்சளாக புட்டு மாதிரி இருந்ததாகவும், அதை தான் விரும்பிச் சாப்பிட்டதாகவும், அது பற்றி கேட்டபோது கடைசியில் அது உடும்புக் கறி என்று சொன்னதாகவும் கூறியிருக்கிறார் சீமான். மேலும், இது குறித்து திருமணத்தில் குறிப்பிடாததால் அவர்கள் வருத்தமடைந்ததாகவும் கூறியிருக்கிறார்.

இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும் சீமானை கேலி, கிண்டல் செய்து வருகின்றனர். சீமானின் முழு கதையையும் கேட்க, கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்…


Share it if you like it