அரசியல் கருத்துக்களை “LEAVE LETTER” மாதிரி ஒரு வரியில் எழுத கூடாது – விஜய்க்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை !

அரசியல் கருத்துக்களை “LEAVE LETTER” மாதிரி ஒரு வரியில் எழுத கூடாது – விஜய்க்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை !

Share it if you like it

சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தசட்டம் நேற்று முன்தினம் உடனடியாக அமலுக்குவந்தது. இதுதொடர்பான அறிவிப்பாணையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) நிறைவேற்றப்பட்டது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவில் அடைக்கலம் புகுந்த இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்த மதத்தினர், ஜெயின்மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்க இந்த சட்டம் வழிவகுக்கிறது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகியவை முஸ்லிம் நாடுகள் என்பதால் சிஏஏ சட்டத்தில் முஸ்லிம்கள் சேர்க்கப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில் புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் சிஏஏ விற்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்திச் செயல்படுத்தப்படும் இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 (CAA) போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடிகர் விஜயின் இந்த அறிக்கைக்கு சமூக வலைதளவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நிறுவனர் விஜய் அவர்கள் மத்திய அரசு கொண்டு வந்த சிஏஏ வை எதிர்ப்பதை பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அண்ணாமலை, ஒரு சட்டத்திற்கு எதிராக கருத்து கூறும்போது அந்த சட்டத்தை எதிர்ப்பதற்கான தெளிவான காரணத்தோடு விளக்கமளிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு பள்ளி மாணவர்கள் விடுப்பு கடிதம் எழுதுவதுபோல் ஒரு வரியில் நான் சிஏஏ வை எதிர்க்கிறேன் என்று சொல்வது ஏற்புடையது அல்ல. ஒரு கட்சியை வழிநடத்தும் தலைவராக இருந்து கொண்டு ஒன் லைன் ஸ்டேட்மென்ட் கொடுத்தால் கட்சியை நடத்த முடியாது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விஜய்க்கு பதிலடி கொடுத்துள்ளார். இந்த காணொளியானது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

https://x.com/saravanan_Ind1/status/1768076330086617322?s=20


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *