வாரிசு அரசியலுக்கு 2ஜி கொடுத்த முட்டு!

வாரிசு அரசியலுக்கு 2ஜி கொடுத்த முட்டு!

Share it if you like it

வாரிசு அரசியலுக்கு முட்டு கொடுக்கும் விதமாக, தி.மு.க. மூத்த தலைவர் ஆ. ராசா கொடுத்த விளக்கம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.

தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் ஆ. ராசா. இவர், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் திகார் சிறையில் ஊதுபத்தி உருட்டியதை நாடே நன்கு அறியும். அந்த வகையில், வடநாடு தொடங்கி தமிழ்நாடு வரை ஆ. ராசாவை 2ஜி என்றே அனைவரும் அழைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், தி.மு.க. சார்பில் அண்மையில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்று இருக்கிறது. இதில், ஆ. ராசா கலந்து கொண்டு பேசினார். அதன் சாராம்சம் இதுதான் ; உத்தரபிரதேசம், ஆந்திரா மற்றும் ஓடிசாவில் இருப்பதுதான் வாரிசு அரசியல். தமிழகத்தில், நடப்பது வாரிசு அரசியல் அல்ல என்ற ரீதியில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு ஆ. ராசா முட்டு கொடுத்து இருக்கிறார்.

மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it