இதுதான் கூட்டணி தர்மமா?: முதல்வரை திட்டிய காங்கிரஸ்காரர்கள்!

இதுதான் கூட்டணி தர்மமா?: முதல்வரை திட்டிய காங்கிரஸ்காரர்கள்!

Share it if you like it

பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்க முயன்ற காங்கிரஸ் தலைவர்களை தமிழக காவல்துறையினர் கைது செய்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ராகுல் காந்தியின் எம்.பி. பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து பாரதப் பிரதமர் மோடி நேற்று தமிழகம் வந்தார். அவருக்கு, எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அந்தவகையில், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தமிழக காவல்துறையினர் கைது செய்தனர்.

இதனிடையே, காங்கிரஸ் எஸ்சி பிரிவு மாநில தலைவர் ரஞ்சன் குமார், நேற்று கருப்பு பலூன்களை பறக்க விட இருந்ததாக தமிழக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த நிலையில், ரஞ்சன் குமார் வீட்டில் சோதனை நடத்தி, கருப்பு பலூன்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், ரஞ்சன் குமாரை வீட்டுச் சிறையில் வைத்து கண்காணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it