தமிழக ஆளுநருக்கு எதிராக தி.மு.க. தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இத்தீர்மானத்தை யாருக்கு அனுப்புவார்கள் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், ஆளும் தி.மு.க. அரசுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிரான தீர்மானத்தை இன்று சட்டப்பேரவையில் தி.மு.க. அரசு கொண்டு வந்தது. இதற்கு, தி.மு.க. கூட்டணியில் உள்ளவர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் தான், சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தை விடியல் அரசு யாருக்கு அனுப்பி வைக்கும் என நெட்டிசன்கள் கேள்வி? எழுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.