தி.மு.க.விற்கு எதிராக போராட்டம் வெடிக்கும்:  சி.பி.ஐ.எம் எச்சரிக்கை!

தி.மு.க.விற்கு எதிராக போராட்டம் வெடிக்கும்: சி.பி.ஐ.எம் எச்சரிக்கை!

Share it if you like it

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், போராட்டம் நடத்துவோம் என சி.பி.ஐ.எம். கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

சி.பி.ஐ (எம்) கட்சியின் மாநில செயலாளராக இருப்பவர் கே.பாலகிருஷ்ணன். இவர், பத்திரிகையாளர்களிடம் பேசும் போது இவ்வாறு கூறினார் ; விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய பல்வீங் சிங் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்தவும் தயங்கமாட்டோம் என கூறியுள்ளார்.

இதனிடையே, கலைஞருக்கு நினைவுச் சின்னம் அமைப்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், நிதி நெருக்கடியான சூழலில் கூடுதலான பணம் இதற்கு செலவு செய்ய வேண்டுமா? என்ற கேள்வி வருகிறது. ஆனால், எப்படிப் பார்த்தாலும் நினைவுச் சின்னம் அமைக்க செலவாகத்தானே செய்யும். கடலுக்குள் சின்னம் வைப்பதற்கு எதிராக பல கருத்துகள் வருகின்றன. கடலுக்குள் கட்டுமானமே செய்யக் கூடாது எனவும் கூற முடியாது. சர்ச்சையில்லாமல், எல்லோரும் ஏற்றுக் கொள்கிற வகையில் சின்னம் அமைத்தால் நல்லது என கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு “ஈயம் பூசுன மாதிரி இருக்கணும், “பூசாத மாதிரியும் இருக்கணும்” என்ற வகையில் பாலகிருஷ்ணன் தி.மு.க.விற்கு அறிவுரை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it