கவர்னரை உள்ள வச்சு பூட்டிருவேன்… தொடரும் சீமானின் அலப்பறைகள்!

கவர்னரை உள்ள வச்சு பூட்டிருவேன்… தொடரும் சீமானின் அலப்பறைகள்!

Share it if you like it

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் அலப்பறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், கவர்னர் உள்ளே வைத்து பூட்டி விடுவேன் என்பது லேட்டஸ்ட் என்பதுதான் விஷேசம்!

இயக்குனர், நடிகர், அரசியல்வாதி என பல்வேறு அவதாரங்களுக்கு சொந்தக்காரர் சீமான். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான இவர், சொல்லும் கதைகள் நம்ப முடியாத கற்பனைகளின் உச்சமாக இருக்கும். அதேபோல, நான் அதைச் செய்வேன், இதைச் செய்வேன் என்று வாய்ச் சவடால் பேசுவதிலும் வல்லவர். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த கட்சிக் கூட்டம் ஒன்றில் பேசிய சீமான், நான் ஆட்சிக்கு வந்தா இந்தியாவுக்கே தமிழ்நாடுன்னு பெயர் வச்சுருவேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான், நான் முதலமைச்சராக இருந்தால் கவர்னரை அவரது பங்களாவுக்குள்ளேயே வைத்து பூட்டி விடுவேன் என்று கூறியிருக்கிறார். அதாவது நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும் சீமான், “கருணாநிதி, ஜெயலலிதா இருக்கும்போது கவர்னர்கள் எல்லாம் இப்படித்தான் ஆடிக்கிட்டு இருந்தாய்ங்களா? ஒருவேளை நா வந்து உட்கார்றேன், ஆளுநர பேசச் சொல்லு. நா ஒன்றும் சாதாரண மனிதனின் பிள்ளையல்ல. 1,000 போலீஸை முன்னாடி நிறுத்தி, கவர்னரை பங்களாவுக்குள்ளேயே வச்சு பூட்டி சாவியை எடுத்துட்டுப் போயிருவேன்” என்று பேசியிருக்கிறார்.

இந்த காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சீமான் இன்னும் என்னென்னவெல்லாம் அள்ளி விட்டார் என்பதை தெரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோ பாருங்கள்…


Share it if you like it