45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு: காவல்துறை அனுமதி!

45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு: காவல்துறை அனுமதி!

Share it if you like it

ஏப்.16-ல் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு தமிழக காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் ஏப்ரல் 16 – ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை ) ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பிற்கு தி.மு.க. அரசு முதலில் அனுமதி அளிக்க மறுத்து விட்டது.

இதையடுத்து, உச்சநீதிமன்றம் வரை சென்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சட்ட போராட்டம் நடத்தியது. அதில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு முன்வைத்த வாதங்களை ஏற்றுக்கொண்டு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. உச்சநீதிமன்ற உத்தரவினை தொடர்ந்து, தமிழகத்தில் ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அனுமதி கேட்ட 45 இடங்களுக்கும் தமிழக காவல்துறையினர் உடனே அனுமதி வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it