அரசு அதிகாரிகளின் கையெழுத்தை பயன்படுத்தி மோசடி – பிரான்சிஸ் அதிரடி கைது!

அரசு அதிகாரிகளின் கையெழுத்தை பயன்படுத்தி மோசடி – பிரான்சிஸ் அதிரடி கைது!

Share it if you like it

தமிழக அரசு அதிகாரிகளின் கையெழுத்தை பயன்படுத்தி மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில், பல்வேறு தில்லு முல்லு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் பிரான்சிஸ் ஜெரால்ட். இவர், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட நபர்களை ஏமாற்றி இருக்கிறார்.

இவர், தலைமைச்செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ்., அமுதா ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் கையெழுத்து மற்றும் அரசு முத்திரையை போலியாக பயன்படுத்தி ரூ. 80 லட்சம் மோசடி செய்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து, புதுக்கோட்டை குற்றப்பிரிவு காவல்துறையினர் பிரான்சிஸ் ஜெரால்டை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it