அண்ணாமலைக்கு கொலை மிரட்டல் விடுத்த இரண்டாம் லேயர்!

அண்ணாமலைக்கு கொலை மிரட்டல் விடுத்த இரண்டாம் லேயர்!

Share it if you like it

தி.மு.க.வின் சொத்துப்படியலை வெளியிட்ட தமிழக பா.ஜ.க. தலைவருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன.

கடந்த ஏப்ரல் 14- ஆம் தேதி தி.மு.க.வின் சொத்துப்பட்டியலை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அண்ணாமலையின், இந்த அதிரடி சம்பவம் பொதுமக்கள் மத்தியில் இன்று பேசுப்பொருளாக மாறியுள்ளது. இப்படிப்பட்ட சூழலில், தி.மு.க. மேலிடத்தை பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி கேட்க துவங்கியுள்ளனார்.

இந்த நிலையில் தான், தி.மு.க.வின் மூத்த தலைவரும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமாக இருப்பவர் ஆர்.எஸ். பாரதி. இவர், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமையை மிகவும் கீழ்த்தரமாகவும் அருவருக்கதக்க வகையிலும் விமர்சனம் செய்துள்ளார். மேலும், அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளார் இந்த இரண்டாம் (வெங்காயம் ) லேயர் என்பது குறிப்பிடத்தக்கது.

தி.மு.க.வை வெங்காயத்தோடு ஒப்பிட்டு தமிழக பா.ஜ.க. தலைவர் கொடுத்த விளக்கம் இதோ.

பிரபல எழுத்தாளர் சுப்பு எழுதிய திராவிட மாயா என்னும் ஆங்கில புத்தகம் சென்னை மைலாப்பூரில் உள்ள ஆர்.ஆர். சபாவில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், எழுத்தாளர் பிரபாகரன், துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர் குருமூர்த்தி, வின் டிவி அதிபர் தேவநாதன் யாதவ் மற்றும் பா.ஜ.க முன்னோடிகள் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசியதாவது;

தி.மு.க.வை வீழ்த்துவது மிக எளிது. அது சக்கரவியூகம் போல. வெளியே ஒரு மீடியா மற்றும் ஆங்கில புலமை கொண்ட ஒரு வெளிப்புற லேயர். அதை நாம் பெரிய வெங்காயத்தை உரிப்பது போல் உரித்து உள்ளே சென்றால் அங்கு அட்டாக் லேயர் இருக்கும். இவர்களிடம் நாம் அறிவார்ந்து ஏதாவது பேசினால் கெட்ட வார்த்தைகளில் பேசுவார்கள். நம்மை வசைப்பாடி அடக்கப் பார்ப்பார்கள்.

இந்த அட்டாக் லேயரை மீண்டும் பெரிய வெங்காயத்தை உரிப்பது போல் உரித்து சென்றால் அங்கு குறுநில மன்னர்கள் லேயர் இருக்கும். இவர்களை முதல் இரண்டு லேயர்களும் எப்போதும் பாதுகாத்து கொண்டு இருக்கும். இவர்கள் வசம் பல ஏரியாக்கள் தலைமுறை தலைமுறையாக பிரித்து கொடுக்கப்பட்டிருக்கும். இவர்களுக்கு ஒரு விஷயத்தையும் சுயமாக செய்யும் ஆற்றல் இருக்காது.

ஒரு விமானம் பிடித்து தில்லிக்கு தனியாக சென்று வர கூட இயலாதவர்கள். இந்த லேயரையும் நாம் அதே பெரிய வெங்காயத்தை உரிப்பது போல் உரித்துக் கொண்டு சென்றால், உள்ளே குடும்ப லேயர் இருக்கும். இந்த குடும்ப லேயரிடம் தான் அனைத்து ஆளுமையும் இருக்கும். அதையும் நாம் பெரிய வெங்காயத்தை உரிப்பது போல் உரித்தால், உள்ளே கோபாலபுரம் லேயர் இருக்கும். முதல் நான்கு லேயர்களையும் உரித்து போட்டு விட்டால், இந்த கோபாலபுரம் லேயரை எளிதில் வீழ்த்தி விடலாம். வெங்காயத்தில் உள்ளே எதுவுமே இல்லை என்பது போல் இந்த கோபாலபுர லேயரில் எந்த சரக்கும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்தா வாயின்கோ என்னும் யூடியூப் இணையதள ஊடகம் ஞாயிறு ஸ்பெஷல் என்று வெங்காயப் பாட்டு ஒன்றினை வெளியிட்டு உள்ளது. இக்காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Image
Image

Share it if you like it