கள்ள ஓட்டு போட்ட நபருக்கு ஆதரவாக குரல் கொடுத்த – மதிமாறன்!

கள்ள ஓட்டு போட்ட நபருக்கு ஆதரவாக குரல் கொடுத்த – மதிமாறன்!

Share it if you like it

பல்வேறு குளறுபடி செய்து உள்ளாட்சி தேர்தலில், ஆளும் கட்சியான தி.மு.க அதிக இடங்களில் வெற்றி பெற்றதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கள்ள ஓட்டு போட்ட நபருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். தி.மு.க-வின் தீவிர ஆதரவாளரான மதிமாறன் என்பது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரி 19 அன்று நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் பணம், கொலூசு, பிரியாணி, தங்களது படைபலம், அதிகார பலம், என அனைத்தையும் கட்டவிழ்த்து விட்டு அராஜக வழியில் சென்று இந்த தேர்தலை சந்தித்துள்ளனர் என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் நன்கு அறிவர். இந்த தேர்தலில் நிச்சயம் தி.மு.க கூட்டணி தான் வெல்லும் என்பதை அரசியல் விமர்சகர்கள் கணித்து இருந்தனர். அதை போலவே நேற்றைய தினம் வெளியான தேர்தல் முடிவுகள் உறுதி செய்தன.

ஊடக பலத்தின் துணை, மோடி வெறுப்பு, பொய் பிரச்சாரம், என அனைத்தையும் மீறி தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட தீவிர பிரச்சாரத்தின் மூலம் அக்கட்சி 300-க்கும் மேற்பட்ட இடங்களில் அமோக வெற்றி தனது தடத்தை பதிவு செய்து உள்ளது. ஆளும் கட்சி தவறான வழியில் சென்று ஜனநாயக படுகொலை நிகழ்த்தி, வெற்றி பெற்றுள்ளது என தி.மு.க-வின் செயலுக்கு பலர் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். ஆனால், தி.மு.க-வின் தீவிர ஆதரவாளர் என்று கூறப்படும் மதிமாறன் கள்ள ஓட்டு போட்ட நபருக்கு ஆதரவாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு மக்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் பதிவு இதோ.

அவ்வளவுப் பேர் சூழ்ந்த போதும், முன்னாள் அமைச்சரே மிரட்டிய போதும் அவர் முகத்தில் துளி பயமில்லை. நடையில் கம்பீரம். இதுதான் எமெர்ஜென்சியையே பார்த்த திமுக காரன் பரம்பரை. அவமானம் அவருக்கல்ல; ச்சீ.. இவரெல்லாம் அமைச்சரா இருந்தவரா? என பெயரெடுத்த ஜெயக்குமாருக்குதான் அசிங்கம். அவமானம்.


Share it if you like it