ஆன்மீக ஆட்சியை சல்லி சல்லியாக நொறுக்கிய தி.மு.க. எம்.பி.!

ஆன்மீக ஆட்சியை சல்லி சல்லியாக நொறுக்கிய தி.மு.க. எம்.பி.!

Share it if you like it

ஹிந்துக்கள் குறித்து தி.மு.க. எம்.பி. செந்தில் குமார் தெரிவித்து இருக்கும் கருத்து. அக்கட்சி, மேலிடத்தில் மிகப்பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.

தி.மு.க. பொதுவாக ஹிந்து விரோத கட்சி என்று சொல்லப்படுகிறது. அதனை மெய்ப்பிக்கும் வகையில், தி.மு.க.வை சேர்ந்த மூத்த தலைவர்கள் முதல், அடிமட்ட தொண்டன் வரை ஹிந்து மதத்திற்கு எதிராக தொடர்ந்து பேசி வருகின்றனர். அந்த வகையில், தி.மு.க.வைச் சேர்ந்த தர்மபுரி தொகுதியின் எம்.பி. செந்தில்குமார், ஹிந்து மத பூஜையை நேற்றைய முன்தினம் அவமதிப்பு செய்து இருந்தார்.

அதாவது, தர்மபுரியில் ஒரு ஏரியை சீரமைப்பதற்கான விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த விழாவுக்கு, தர்மபுரி எம்.பி. என்கிற முறையில் செந்தில்குமார் அழைக்கப்பட்டு இருந்தார். அப்போது, வழக்கமாக அரசு விழாக்களில் செய்யப்படுவது போல, ஹிந்து முறையில் சடங்கு சம்பிரதாயங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன.

இதனை, பார்த்து கடும் கோவம் அடைந்த தி.மு.க. எம்.பி. எப்படி ஹிந்து மதப்படி மட்டும் பூஜை செய்யலாம்? கிறிஸ்தவ பாதிரியாரை கூப்பிடுங்கள். இஸ்லாமிய மதகுருவை கூப்பிடுங்கள் என்று கதளி ஆடி இருக்கிறார். இவர், தெரிவித்த கருத்துக்கள் ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் அமைந்து இருந்தன. இதையடுத்து, தமிழகம் முழுவதும் தி.மு.க.விற்கு கண்டனங்களும், எதிர்ப்புகளும் குவிந்தன.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வருகைக்கு பின்பு, ஹிந்துக்கள் மத்தியில் மிகப் பெரிய எழுச்சி ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக, ஹிந்துக்களை தாஜா செய்து கூஜா தூக்கும் நிலைக்கு விடியல் அரசு தள்ளப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தான், தர்மபுரி எம்.பி. தெரிவித்து இருக்கும் கருத்து பெரும் சர்ச்சையாக மாறி இருக்கிறது. இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த தி.மு.க. மேலிடம் எம்.பி.யை அழைத்து செம்ம டோஸ் விட்டு இருப்பதாக நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்து இருக்கிறது.


Share it if you like it