கள்ளசாராயம் அருந்தியவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என அரசு மருத்துவமனை மீது பெண்கள் பரபரப்பு குற்றச்சாட்டினை சுமத்தியுள்ளனர்.
கள்ளச்சாராயம் அருந்தியதில் 13-க்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்துள்ளனர். இச்சம்பவம், தமிழக மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், கள்ளச் சாராயம் அருந்திய நபர்கள் பலர் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, உரிய சிகிச்சையை மருத்துவர்கள் வழங்கவில்லை என பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பத்திரிகையாளர்களிடம் கண்ணீர் மல்க கூறிய சம்பவம் காண்போர் நெஞ்சை கரைய வைப்பது போல உள்ளது.