‘என்னய்யா நடக்குது இங்க’: பாரில் சரக்கடித்த இருவர் மர்கயா… ஜெயகடா ஆட்சியில் பலிகடா ஆகும் ஏழைகள்!

‘என்னய்யா நடக்குது இங்க’: பாரில் சரக்கடித்த இருவர் மர்கயா… ஜெயகடா ஆட்சியில் பலிகடா ஆகும் ஏழைகள்!

Share it if you like it

தமிழகத்தில், விடியல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில், கஞ்சா, மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதன்காரணமாக, சட்டம் ஒழுங்கு சிரிப்பாய் சிரித்து வருகிறது. தவிர, இளம் பெண்கள், இளைஞர்கள் மதுவிற்கு அடிமையாகும் சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கள்ளச்சாராயம் அருந்தி 22 – பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம், இன்றுவரை தமிழக மக்களிடையே பேசுப்பொருளாக இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், தஞ்சை மாவட்டம் கீழ அலங்கம் பகுதியை சேர்ந்தவர்கள் விவேக் (36) மற்றும் முதியவர் குப்புசாமி. இவர்கள், இருவரும் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே அதன் எதிரில் செயல்பட்டு வந்த சட்டவிரோத பாரில் மது வாங்கி குடித்துள்ளனர். இதையடுத்து, சிறிது நேரத்தில் இருவரும் உயிர் இழந்துள்ளனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it