அடுத்த பிரதமர் யார்?: பிரபல நிறுவனம் வெளியிட்ட கருத்து கணிப்பு!

அடுத்த பிரதமர் யார்?: பிரபல நிறுவனம் வெளியிட்ட கருத்து கணிப்பு!

Share it if you like it

எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்று 49 சதவீத மக்கள் தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.

மத்தியில், பா.ஜ.க. ஆட்சி அமைத்து 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை, நாடு முழுவதும் பா.ஜ.க தொண்டர்கள், தலைவர்கள் கொண்டாடி வருகின்றனர். மூன்றாவது முறையாக மீண்டும் மோடிதான் பிரதமராக வருவார் என பல அரசியல் நோக்கர்கள் ஆரூடம் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் யார் பிரதமராக வரவேண்டும் என்று ஏபிபி செய்தி நிறுவனம் மற்றும் சி வோட்டர் இணைந்து நாடு முழுவதும் கருத்துக் கணிப்பு ஒன்றினை நடத்தியிருக்கிறது. இதில், 49% சதவீதம் பேர் மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். 18% சதவீதம் பேர் ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு 6 சதவீதம் பேரும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5 சதவீதம் பேரும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு 2 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, மற்றொரு கருத்துக் கணிப்பில், பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால ஆட்சி மிகவும் திருப்திகரமாக இருப்பதாக 73.02 சதவீத மக்கள் தெரிவித்துள்ளனர். இது 2021ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 62.05 சதவீதமாகவும், 2022ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 82.96 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஐந்தில் மூன்று இந்தியர்கள் பிரதமர் மோடி வலிமையான முடிவுகளை எடுப்பதாக கூறியுள்ளனர்.


Share it if you like it