நாசா, மைக்ரோசாப்ட் நிறுவனங்களில் தமிழர்களுக்கு பணி கிடைக்க… கலைஞர் ஒருவர்தான் காரணம்: – வைரமுத்து  நெகிழ்ச்சி!

நாசா, மைக்ரோசாப்ட் நிறுவனங்களில் தமிழர்களுக்கு பணி கிடைக்க… கலைஞர் ஒருவர்தான் காரணம்: – வைரமுத்து நெகிழ்ச்சி!

Share it if you like it

தமிழர்கள் மிகப்பெரிய நிறுவனங்களில் பணி புரிய கலைஞர்தான் காரணம் என வைரமுத்து பேசிய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

திராவிட கவிஞர் வைரமுத்து. இவர், மீது 19-க்கும் மேற்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளதாக பலர் கூறி வருகின்றனர். அந்த வகையில், பிரபல பாடகி சின்மயி வைரமுத்து குறித்து தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், கலைஞர் நூற்றாண்டு விழா அண்மையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வைரமுத்து இவ்வாறு பேசினார் : நாசா, மைக்ரோசாப்ட் நிறுவனங்களில் தமிழர்கள் பணி புரிய கலைஞர்தான் காரணம் என்று கூறியிருக்கிறார். இந்த காணொளிக்குதான் வைரமுத்துவை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.

மேற்கூறிய நிறுவனங்களில் தமிழர்கள் பணி புரிய அவர்களது கடும் முயற்சி காரணம் அல்ல. கருணாநிதியின் ரெக்கமெண்ட் லெட்டர்தான் காரணம் என்று மீ டூ கூறாமல் இருந்தாரே அதுவரை சந்தோஷம்தான் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it