நாகையில் பயங்கரம்: நெஞ்சை பதைபதைக்க வைக்கும் படுகொலை!

நாகையில் பயங்கரம்: நெஞ்சை பதைபதைக்க வைக்கும் படுகொலை!

Share it if you like it

நாகை மாவட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகியின் தம்பி படுகொலை செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக, ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக் கொண்ட பின்பு சட்டம் ஒழுங்கு பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. குறிப்பாக, மக்கள் ஒருவித அச்ச உணர்வுடன் வாழும் நிலையே ஏற்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவிகளை தொடர்ந்து பெண்களும் வீதியில் தனியே செல்ல முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. எங்கு பார்க்கினும் கொலை, கொள்ளை, சங்கிலி பறிப்பு என தமிழகம் விடியல் ஆட்சியில் இருண்ட காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.

அந்த வகையில், சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த தி.மு.க. வட்டச் செயலாளர் செல்வம் என்பவர் சமீபத்தில் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தனது கட்சி நிர்வாகியை கூட காக்க முடியாத அரசு எப்படி? தமிழக மக்களை காக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் தங்களது கோவத்தை அந்நாட்களில் வெளிப்படுத்தி இருந்தனர்.

இதனை தொடர்ந்து, சென்னையில் அதுவும் நடுரோட்டில் படுகொலை செய்யப்பட்ட ஒருவரின் உடல் சாலையோரம் கிடப்பது போன்ற காணொளி அண்மையில் வெளியாகி தமிழகத்தையே உலுக்கி இருந்தது. இப்படியாக, விடியல் ஆட்சியில் கொலை, கொள்ளைகள் தொடர்பான குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதனிடையே, நாகப்பட்டின மாவட்டம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க துணைச் செயலாளராக இருப்பவர் ரமேஷ். இவரது, தம்பி மனோகரனை கூலிப்படையை சேர்ந்த ரவுடிகள் திட்டமிட்டு படுகொலை செய்து இருக்கின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை தொடர்ந்து, சி.சி.டிவியில் பதிவான அக்காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it