போலீஸ் துணை… கள்ள சாராயம் அமோகம்!

போலீஸ் துணை… கள்ள சாராயம் அமோகம்!

Share it if you like it

போலீஸார் துனணையுடன் தி.மு.க. நிர்வாகி ஒருவர் கள்ள சாராயம் விற்ற சம்பவம் சேலம் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பூரண மதுவிலக்கு கொண்டு வருவோம் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார். இதனையே, தி.மு.க. மூத்த தலைவர்கள் அனைவரும் கடந்த சட்டமன்ற தேர்தலில் வழிமொழிந்து இருந்தனர். இதையடுத்து, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அந்த வகையில், தி.மு.க. தனது ஒரு வருட ஆட்சியை நிறைவு செய்து இருக்கிறது. ஆனால், முதல்வர் ஸ்டாலின் மதுவிலக்கு குறித்து இன்று வரை வாய் திறக்காமல் தொடர்ந்து கள்ள மெளனமாக இருந்து வருகிறார்.

இப்படிப்பட்ட சூழலில் தான், தி.மு.க. நிர்வாகி மணி என்பவர் சேலம் மாவட்டத்தில் கள்ள சாராயம் விற்பனை செய்து இருக்கிறார். அதுவும், காவலர்களின் துணையுடன் என்பது தான் கொடுமையிலும் கொடுமை. இதுகுறித்தான, காணொளியை பிரபல ஊடகமான வின் டிவி செய்தியாக வெளியிட்டு இருக்கிறது. அதன் லிங்க் இதோ.


Share it if you like it