ஆ.ராசாவின் வக்கிர பேச்சு: ரசிக்கிறாரா ஸ்டாலின்?

ஆ.ராசாவின் வக்கிர பேச்சு: ரசிக்கிறாரா ஸ்டாலின்?

Share it if you like it

ஹிந்துக்களை திட்டமிட்டு இழிவுப்படுத்தி வரும் தி.மு.க. தலைவர்களின் பேச்சை தமிழக முதல்வர் ஸ்டாலின் ரசிக்கிறாரா? என்ற ஐயம் மக்கள் மத்தியில் தற்போது எழுந்து இருக்கிறது.

தி.மு.க.வின் மூத்த தலைவர் டி. ஆர். பாலுவின் மகனும், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினருமாக இருப்பவர் டி.ஆர்.பி. ராஜா. இவர், ஹிந்துக்களின் கலாச்சாரம், பண்பாடு, வழிபாட்டுமுறையை கீழ்த்தரமாகவும், அருவருக்கதக்க வகையிலும், விமர்சனம் செய்ய கூடியவர். இதுதவிர, சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஹிந்துக்களை குறிவைத்து தாக்கி பேசி வருவதையே தனது கொள்கையாக கொண்டவர். இப்படி ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தி.மு.க.வை சேர்ந்த தலைவர்கள் தொடர்ந்து இழிவுப்படுத்தி வருகின்றனர். ஹிந்துக்களின் புனித கடவுளான விஷ்ணு பகவானை அண்மையில் இழிவுப்படுத்தும் நோக்கில் காணொளி ஒன்றினை டி.ஆர்.பி. ராஜா வெளியிட்டு இருந்தார்.

இதற்கு, பா.ஜ.க, வி.ஹெச்.பி மற்றும் பல்வேறு ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தன. சமூக நீதி அரசு, அனைவருக்குமான அரசு என சொல்லி கொள்ளும் தமிழக முதல்வர் ஸ்டாலின் டி.ஆர்.ராஜா மீது இன்று வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே நிதர்சனம்.

இப்படிப்பட்ட சூழலில், தி.மு.க. எம்.பி. ஆ.ராசா கலந்து கொண்ட நிகழ்ச்சியில், ஹிந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன். சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன். ஹிந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சமன். ஹிந்துவாக, இருக்கும் வரை நீ தீண்ட தகாதவன். எத்தனை, பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள் தனது வக்கிர புத்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

தி.மு.க. எம்.எல்.ஏ., எம்.பி. ஒரு குறிப்பிட்ட மதத்தை தொடர்ந்து இழிவுப்படுத்தி வருகின்றனர். ஆனால், தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து கள்ள மெளனம் காத்து வருகிறார். சின்ன புத்தி, படைத்தவர்களின் பேச்சை கண்டிக்க தி.மு.க. தலைவருக்கு மனமில்லையா? அல்லது அவர்களை பேச விட்டு ரசிக்கிறாரா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it