பொய்களை நாங்கள் பேசத்தான் செய்வோம் உளறி கொட்டிய சரவணன்!

பொய்களை நாங்கள் பேசத்தான் செய்வோம் உளறி கொட்டிய சரவணன்!

Share it if you like it

பிரபல நடிகை கஸ்தூரி சங்கர் மற்றும் தி.மு.க. செய்தி தொடர்பாளர் சரவணனுக்கு இடையில் நடைபெற்ற காரசார விவாதத்தின் காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

தி.மு.க.வின் செய்தி தொடர்பாளராக இருப்பவர் சரவணன் அண்ணாதுரை. இவர், வட இந்திய ஊடகங்களில் தொடங்கி தமிழக ஊடகங்கள் வரை தி.மு.க. செய்த சாதனைகள் குறித்து பேசுவதில்லை. அதற்கு மாறாக, உதயநிதி மற்றும் ஸ்டாலின் பெருமைகளை பாடுவதையே வழக்கமாக கொண்டவர். இதுதவிர, ஊடக விவாதங்களில் அறிவுக்கு பொறுத்தமற்ற முறையில் பேசி நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக் கொள்வதை வாடிக்கையாக கொண்டவர்.

இதனிடையே, கடந்த ஆண்டு தமிழக அரசு 21 பொருட்கள் அடங்கிய பொங்கள் பரிசு தொகுப்பினை வழங்கி இருந்தது. ஸ்டாலின் அரசு வழங்கி இருந்த பொங்கல் பரிசுப் பொருட்கள் இன்று வரை தமிழக மக்களிடம் பேசுப் பொருளாக இருந்து வருகிறது. இதற்கு மத்தியில், பிரபல ஊடகமான நியூஸ் 7 பொங்கல் பரிசு பொருட்கள் குறித்து ஊடக விவாதம் ஒன்றினை நடத்தி இருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தி.மு.க. செய்தி தொடர்பாளர் சரவணன், வெல்லம் என்றால் உருகதான் செய்யும். வெள்ளத்தின் மெல்ட்டிங் பாயிண்ட் தெரியாமால் பேசாதீர்கள் என ஆவேசமாக பேசியிருந்தார்.

இந்த நிலையில், ஆயுத எழுத்து எனும் நிகழ்ச்சியை பிரபல ஊடகமான தந்தி டிவி அண்மையில் நடத்தி இருந்தது. இந்த, ஊடக விவாதத்தில் தி.மு.க. வின் செய்தி தொடர்பாளர் சரவணன் கலந்து கொண்டார். அதேபோல, இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர், பேச்சாளர், வழக்கறிஞர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் என பன்முக தன்மை கொண்ட நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். இதையடுத்து, நடைபெற்ற காரசார விவாதத்தில் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, திராவிட பொய்களை நாங்கள் பேசத்தான் செய்வோம் என சரவணன் கோவத்தின் உச்சிக்கே சென்று உளறி கொட்டி இருக்கிறார். இந்த காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதன் லிங்க் இதோ.


Share it if you like it