முஸ்லீம்களுக்கு உள் இட ஒதுக்கீடு: கலைஞர் போட்ட பிச்சை – தி.மு.க. பேச்சாளர் சர்ச்சை கருத்து!

முஸ்லீம்களுக்கு உள் இட ஒதுக்கீடு: கலைஞர் போட்ட பிச்சை – தி.மு.க. பேச்சாளர் சர்ச்சை கருத்து!

Share it if you like it

இஸ்லாமியர்களுக்கு, உள் இட ஒதுக்கீடு கலைஞர் போட்ட பிச்சை என தி.மு.க.வை சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் பேசியிருக்கும் காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

தமிழகத்தில், தி.மு.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சி அமைந்த பின்பு பொதுமக்களுக்கு உரிய மரியாதையை தி.மு.க.வை சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கழக கண்மணிகள் கொடுத்து வருவதில்லை என்று சொல்லப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அந்த வகையில், தி.மு.க.வின் சார்பில் அண்மையில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், கலந்து கொண்ட உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இவ்வாறு பேசினார் ;

ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் கோவில்கள் இருக்கும் தெருவில் நடக்கவே முடியாது. இன்று அந்த நிலைமை உண்டா? இது எல்லாம் எப்படி மாறியது. தந்தை பெரியார் போட்ட பிச்சையால் இது எல்லாம் மாறியது என்பதை யாராவது மறுக்க முடியுமா? என சர்ச்சைக்குறிய வகையில் மீண்டும் பேசியிருக்கிறார்.

இதனிடையே, தி.மு.க. மூத்த தலைவரும் அப்போதைய மாநிலங்களவை எம்.பி.யுமாக இருந்தவர் ஆர்.எஸ். பாரதி. இவர், கடந்த 2017 – ஆம் ஆண்டு நெல்லையில் பத்திரிகையாளர் சந்தித்த போது இவ்வாறு கூறினார் ; தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை செளந்தரராஜன் மருத்துவர் ஆவதற்கு காரணம் தி.மு.க. போட்ட பிச்சைதான் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இப்படிப்பட்ட சூழலில், தி.மு.க.வை சேர்ந்த பெண் பேச்சாளர் ஒருவர், இஸ்லாமியர்கள் இன்று உள் இட ஒதுக்கீடு பெற்று இருப்பதற்கு காரணம் கருணாநிதி போட்ட பிச்சை என்று பேசியிருக்கிறார். இக்காணொளிதான், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் விவரங்களுக்கு, அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it